தமிழ்நாடு
கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவு!
![656266-meenakshiammantempletank - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/656266-meenakshiammantempletank.jpg)
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுவதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சற்று முன்னர் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பதாக தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இந்த வாரம் முதல் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அனைத்து மத பக்தர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே கோவில்களை திறக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவினர் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.