தமிழ்நாடு
வரலாறு காணாத வன்முறை, திமுகவின் அராஜகம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 1013 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக தரப்பில் 209 பேர்களும் மற்றவை 145 பேர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 138 இடங்களிலும் அதிமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது இருமடங்கு வெற்றியாக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் திமுக வரலாறு காணாத அராஜகத்தை செய்துவிட்டு தேர்தல் ஆணையத்தில் தனது கைப்பாவையாக நடத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரங்கள் இதோ: