தமிழ்நாடு
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை
![mk stalin 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/mk-stalin-1200.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்
இருப்பினும் பெயரளவிற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள், மால்களில் 50 சதவீத பார்வையாளர்கள், கோயில்கள் மூடப்படுவது உள்ளிட்ட ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருவதை அடுத்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர், துறை ரீதியிலான அதிகாரிகள் ஆகியோருடன் முதலமைச்சர் ம க ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பிறகு கூடுதல் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
மேலும் ஆயுத பூஜை தினத்தில் கோவில்கள் திறப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஆயுத பூஜை தினத்தில் கோவில்கள் திறப்பது குறித்து நாளைய ஆலோசனையில் முதல்வர் பரிசீலனை செய்வார் என்று கூறப்படுகிறது.