இந்தியா
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த 11ஆம் வகுப்பு மாணவர்!
பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் அவரது பெற்றோர்கள் நடனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் அந்த மாணவர் மிகுந்த சோகத்துடன் இந்த நிலையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்கொலைக்கு முன் அந்த மாணவர் பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிஉள்ளது.
அந்த மாணவர் கடிதத்தில் தான் இறந்த பிறகு பாடகர் அர்ஜித் சிங் மற்றும் நடன கலைஞர் சுஷாந்த் கத்ரி ஆகியோரை வைத்து பாடல் தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் இதுவே தனது கடைசி ஆசை என்றும் இந்த கடைசி ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.
நடனத்தின் மீதுள்ள ஆசை காரணமாக இந்த கடைசி ஆசையை அவர் தனது கடிதத்தில் எழுதி உள்ள நிலையில் இந்த ஆசையை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.