இந்தியா
ரூ.53 ஆயிரம் கட்டி ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு வந்தது சோப்புக்கட்டி: அதிர்ச்சி தகவல்
ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ரூபாய் 53 ஆயிரம் கட்டி ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு சோப்புக் கட்டிகள் வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஐபோன் வாங்குவதற்காக மும்பையை சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவரும் ஆர்டர் செய்தார். டிஸ்கவுண்ட் போக 52 ஆயிரத்து 999 ரூபாய் அவர் ஆன்லைனிலேயே பரிவர்த்தனை செய்து உள்ளார் என்பதும் ஆர்டர் செய்துவிட்டு ஐபோன் வரவை அவர் கனவுடன் காத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திலிருந்து பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அந்த பார்சலை அவர் பிரிக்கும்போது ஆர்வமிகுதியால் வீடியோவும் பதிவு செய்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆர்டர் செய்த போன் 12 மாடலுக்கு பதிலாக இரண்டு சோப்புக்கட்டிகள் இருந்துள்ளதை பார்த்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனையடுத்து அவர் பதிவு செய்த வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் அவர் புகார் அளித்தார். இதனை அடுத்து தங்களுடைய தவறை ஒப்புக்கொண்ட ஆன்லைன் நிறுவனம் உடனடியாக சரி செய்வதாகவும் முறையான விசாரணைக்குப் பிறகு பணம் முழுவதுமாக திருப்பி செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த முறை ஆன்லைனில் நீங்கள் ஐபோன் ஆர்டர் செய்தால் அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு அதன் பிறகு டெலிவரி செய்யும் நபரிடம் ஓடிடி எண்ணை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.