Connect with us

தமிழ்நாடு

கொலை வழக்கு: கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

Published

on

கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்த வழக்கில் கடலூர் எம்பி ரமேஷ் உள்பட 6 பேர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கடலூர் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

திமுக எம்பி ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது. இந்த ஆலையில் வேலை செய்து வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஆட்கள் கொலை செய்துவிட்டதாக கோவிந்தராஜன் மகன் செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாமக வழக்கறிஞர் பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிந்தராஜனின் பிரேத பரிசோதனையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

இதனை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி சிபிசிஐடி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி இந்த வழக்கை எடுத்து விசாரணையை தொடங்கியது. முதல் கட்ட விசாரணையில் கடலூர் எம்பி ரமேஷ்க்கு சொந்தமான ஆலைக்கு சென்று விசாரணை நடத்தியபோது கோவிந்தராஜன் அடித்து கொடுமைப் படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த ஆலை ஊழியர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி 6 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும், அவர்களில் திமுக எம்பி ரமேஷூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிபிசிஐடி 5 ஊழியர்களை கைது செய்த நிலையில் ஆறாவதாக எம்பி ரமேஷ் தலைமறைவாக இருந்ததால் அவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலூர் எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆறு பேரில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கடலூர் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் எம்பி ரமேஷ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!