இந்தியா
பெண் போலீஸிடம் பிரியங்கா காந்தி செய்த நெகிழ்ச்சி செயல்… வைரல் வீடியோ..
மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. தந்தையின் மறைவுக்கு பின் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது போல் இவரும் அரசியலில் இறங்கினார். காங்கிரஸ் நடத்தும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி சிலர் கொலை செய்த போது, உடனடியாக அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுத்தார். அவரை உ.பி. போலீசார் தனிமை சிறையில் அடைத்தனர். ஆனாலும் அவர் அசரவில்லை.அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஒரு கோவிலில் தரிசனம் செய்வதற்காக பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் அதிகாரியை அழைத்து கட்டியணைத்து தனது அன்பை காட்டினார். இது அந்த பெண் காவல் அதிகாரிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், பிரியங்கா காந்தியின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
❤️????❤️ pic.twitter.com/7d4Aq0ieBV
— Srinivas BV (@srinivasiyc) October 11, 2021