Connect with us

இந்தியா

தமிழகம் உள்பட பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்!

Published

on

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில நாட்களில் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நிலக்கரி விலை விண்ணை முட்டி உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுவதால் பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி வழங்கக்கோரி மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் நிலைமை சீராகும் என்றும் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் கடும் மின்சார விநியோக பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய மின்சாரத் துறை செயலாளர் அலோக்குமார் என்பவர் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி மாற்றாக தேவையான அளவு கேஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒரு சில நாட்களில் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் மின்உற்பத்தி முடங்கும் நிலையில் சில நாட்களில் நிலைமை சீரடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வட சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் மின்வெட்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!