தமிழ்நாடு
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: சென்னையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம்!
![metro train - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/metro-train.jpg)
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாவது கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வடபழனி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னையில் மேலும் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பெரு மாநகராட்சி, பெரம்பூர் (செம்பியம்) பகுதியல் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையில் 10.10.2021 முதல் 29.10.2021 வரை CMRL மெட்ரோ இரயில் பணி தொடர்பாக டாடா புரொஜக்ட் லிமிடெட் நிறுவனத்தார் மண் பரிசோதனை பணிகளை மேற்கொள்ள இருப்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நலன் குருதி மாதவரம் நெடுஞ்சாலையானது ஒரு, வழிய்பாதையாக மாற்றம். செய்யப்பட்டுள்னது.
அதஸ்படி முலக்கடை மார்க்கத்திலிந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் இரயில் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு செல்பவர்கள், லட்சமி அம்மன் கோலில் தெரு, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பிபி ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக சென்றிட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் மார்க்கத்திலிருந்து, மூலக்கடை நோக்கி செல்லக்கஷய வாகனங்கள் மேற்படி மாதவரம் நெடுஞ்சாலையினை தொடர்ந்து பயஸ்படுத்திக்கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகஆள் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது