சினிமா செய்திகள்
1000 பாடல்களுக்கும் மேல் எழுதிய கவிஞர் பிறைசூடன் காலமானார்: ரசிகர்கள் அஞ்சலி!
ஆயிரம் திரைப்பட பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் சற்றுமுன் சென்னையில் காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியர் பிறைசூடன் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் படங்களுக்கு அவர் பல பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கவிஞர் பாடலாசிரியர் பிறைசூடன் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்பதும் அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.