தமிழ்நாடு
சமஸ்கிருத மொழிகளில் கோவில்களின் பெயர்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்!
முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில் ஒருவர் சேகர்பாபு என்பதும் அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
குறிப்பாக கடந்த சில வருடங்கள் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அடுத்து அந்த நிலங்களை மீட்டு வருகிறார் என்பதும் இதுவரை நூற்றுக்கணக்கான ஏக்கர் கோடிக்கணக்கான மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை தொடங்கி வைத்தார் என்பதும் இது அவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்பதும் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தமிழ் அர்ச்சனை நடக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருக்கும் நிலையில் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சில கோவில்களுக்கு சமஸ்கிருத பெயர்கள் உள்ளன என்றும் இது குறித்து தீர ஆய்வு செய்து முதலமைச்சர் அனுமதியுடன் இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி ஒன்றுக்கு சேகர்பாபு அவர் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.