தமிழ்நாடு
வேகமாக தரையில் உரசிய விமானம்.. திருச்சி ஏர்போர்ட்டில் மீண்டும் பரபரப்பு!
திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது.
திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு சம்பவங்களோ அதிகம் நடக்க தொடங்கிவிட்டது. கடந்த மாதம் இரண்டு முறை ஏர்இந்தியா விமானம் பிரச்சனைக்கு உள்ளானது.
அப்படித்தான் நேற்றும் இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.125 க்கு மேற்பட்டோர்கள் அந்த விமானத்தில் இருந்தார்கள். திருச்சியில் காலை 9.25 மணிக்கு விமானம் தரையிறங்க வேண்டியது.
அதன்படி இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரையிரங்க வந்துள்ளது. ஆனால் திருச்சியில் இரவில் இருந்தே மோசமான வானிலை நிலவியது. மழை பெய்து வந்தது. இதனால் பைலட்டிற்கு விமான ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்பதால் திரும்பி சென்றது.