தமிழ்நாடு
தமிழகத்தில் ரெட்-அர்ல்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பது என்பதால் ரெட்-அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.