Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்: தமிழக அரசு தீவிரம்!

Published

on

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் அரசு முறை சுற்றுப்பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிகள் மேற்பார்வை இடுவதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2005 ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412 இபி என்ற ரக ஹெலிகாப்டரை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வரும் நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் அந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இல்லாததால் அவசர காலங்களில் அதனை பயன்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஹெலிகாப்டரை மருத்துவ வசதிகாக பயன்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

14 பேர் வரை பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர் 2005ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும், இதுவரை 2,449 மணிநேரங்கள் மட்டுமே வானில் பறந்து உள்ளது என்றும், இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றுவதற்கு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஹெலிகாப்டரை மருத்துவ காரணங்களுக்காக ஏர் ஆம்புலன்ஸ் மாற்றுவதன் சாத்தியக் கூறுகள் மற்றும் ஹெலிகாப்டரை இறக்கும் வசதிகள், மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள், அதற்கான செலவுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் அவசரமான நோயாளிகள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஏற்கனவே இது போன்ற ஏர் ஆம்புலன்ஸ் வசதி கர்நாடக மாநிலத்தில் உள்ளது என்பதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக அவசரமாக வேறு மருத்துவனைக்கு மாற்றுவதற்கு இந்த ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்திலும் விரைவில் இந்த ஹெலிகாப்டர்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்தும் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?