சினிமா
அடுத்த படத்தை இயக்குவது அவர் இல்லையாம்!.. திடீரென மனதை மாற்றிய ரஜினி…
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. பைக்கை ஓட்டிக்கொண்டு கையில் அரிவாளை ரஜினி பிடித்திருப்பது போன்ற காட்சி போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க : டிரெண்டிங் பாட்டுக்கு ஷங்கர் மகள் கொடுத்த போஸ் – வைரல் வீடியோ…
இப்படத்திற்கு பின் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிப்பதாக கூறப்பட்டது. இவர் ‘கன்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். அதோடு, தீவிர ரஜினி ரசிகர். இவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப்போக வேலைகள் துவங்கியது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது இதில் மாற்றம் நிகழலாம் எனத் தெரிகிறது. தேசிங்கு பெரியசாமி கூறிய கதை பெரிய பட்ஜெட் படமாகும். ரஜினி சம்பளமே ரூ.100 கோடி. எனவே, படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ.150 கோடியை தொடும் எனத்தெரிகிறது. எனவே, ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ள அவரால் இந்த பெரிய பட்ஜெட்டை தாங்குவாரா என்கிற எண்ணம் ரஜினிக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
எனவே, 3 முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு அவர் ஓகே செய்து வைத்துள்ளார். அண்ணாத்த படம் வெளியான பின் எந்த கதையில் நடிப்பது என ரஜினி முடிவுசெய்யவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.