உலகம்
சாதாரண வேலை, 35 வயதில் ரூ.10 கோடியுடன் ஓய்வு பெற்ற பெண்: ரகசியம் என்ன?
சாதாரண வேலை பார்த்த இளம்பெண் ஒருவர் 35 வயதிலேயே ரூபாய் 10 கோடி சேமிப்புடன் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் கோடீஸ்வரராக வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதும், ஒரு சிலருக்கு அது வெறும் கனவாகவே போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் சேமிப்பு ஆகியவை இருந்தால் 35 வயதிலேயே நடுத்தர வர்க்கத்தினர்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதை பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த கேட்டி டொனகன் என்ற இளம்பெண் சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் அவர்கள் கொடுத்த பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேமித்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதே போல கேட்டி டொனககல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்ற போதும், திருமணம் ஆன போதும் அவர் தனது சேமிப்பை கைவிடவில்லை.
திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் செல்லாமல் தனது கணவரின் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வாடகை பணத்தை மிச்சப்படுத்தினார். அதன் பிறகு தன்னுடைய வருமானம் மற்றும் தன்னுடைய கணவரின் வருமானம் ஆகியவற்றை சரியான முதலீட்டில் சேமித்தார். ஆடம்பரம் என்பதற்கு சிறிது கூட இந்த தம்பதியினர் இடம் கொடுக்கவில்லை. அவர்களது திருமணம் கூட சாதாரண மண்டபத்தில் தான் நடந்தது என்பதும் நண்பர்களின் உதவியால் திருமண மண்டபத்தை செலவே இல்லாமல் அலங்கரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின்னும் உல்லாச விடுமுறைகளை கழிக்காமல் கடுமையாக உழைத்து சேமித்து வந்தனர். ஒரு கட்டத்தில் கேட்டி டொனகதனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழிலில் இறங்கினார். இதனை அடுத்து அவருடைய வருமானம் அதிகரித்தது. வருமானம் அதிகரித்துதாலும், செலவுகளை அதிகரிக்காமல் அத்தியாவசியச் செலவு போக மீதம் உள்ள அனைத்து பணத்தையும் இருவரும் சேமித்து வைத்தனர். பழைய கார்களை மட்டுமே பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இந்த தம்பதிகளின் இலக்கான ஒரு மில்லியன் பவுண்டுகளை அடைந்தார்கள். அதன்பிறகு கேட்டி டொனக தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தற்போது அவருடைய ஒரு மில்லியன் பவுண்டுக்கு 65 ஆயிரம் பவுண்டுகள் மாதாமாதம் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் பணத்தை சேமிக்க முறை குறித்த ரகசியத்தை அவர் நிதி மேலாண்மை பள்ளியை நடத்தி அதன் மூலம் இலவசமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். தன்னைப்போலவே தனது நாட்டில் உள்ள அனைவரும் கோடிஸ்வரர் ஆக வேண்டும் என்பதை அவர் இலவசமாக பணத்தை சேமிப்பது எப்படி என கற்றுத் தருகிறார். கேட்டி டொனக அவர்களின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.