Connect with us

இந்தியா

7-11 வயதினர்களுக்கு தடுப்பூசி: சீரம் நிறுவனத்திற்கு அனுமதி!

Published

on

இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் கடந்த பல மாதங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி தினந்தோறும் அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் அதில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பெரியவர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீத மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிசோதனைகளும் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 7 முதல் 11 வயதினருக்கான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனம் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசியை மருத்துவ ரீதியில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் இந்த பரிசோதனையின் முதல் கட்டமாக 100 பங்கேற்பாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் 7 முதல் 11 வயதான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கும் என்றும் 12 வயது மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் அந்த தடுப்பூசி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்18 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!