தமிழ்நாடு
நீட் தேர்வு ரத்தாகிறதா? சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவால் பரபரப்பு!
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது என்பதும் அந்த தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வர உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி நீட் தேர்வின் மீதான நம்பிக்கையை தகர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல மாணவர்கள் முறைகேடு செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், எலக்ட்ரானிக் டிவைஸ் உதவியாலும் நீட் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாணவர்கள் மற்றும் நீட் பயிற்சி நிலையம் நடத்துபவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலரும் ரிட் மனு தாக்கல் செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல முறைகேடுகள் நடந்துள்ள இந்த நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்தால் அது அநீதியாக இருக்கும் என்று அந்த மாணவர்கள் தங்களுடைய மனுவில் குறிப்பிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த விசாரணையின் முடிவில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது இந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.