உலகம்
தன்னை தானே திருமணம் செய்த பெண்ணுக்கு கிடைத்த ரூ.3 கோடி!
தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவருக்கு ரூபாய் 3 கோடி வரை வரதட்சணையுடன் மாப்பிள்ளை வந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிரிஸ் கிளாரியா என்ற மாடலிங் நடிகை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார், பல ஆண்களுடன் டேட்டிங் செய்து, கடைசியில் தனக்கு ஆண்கள் யாரும் செட்டாக மாட்டார்கள் என்பதை முடிவு செய்த அவர், தனக்கு தகுந்த ஆண்கள் யாருமே இல்லை என்ற முடிவு எடுத்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்த செய்தி பிரேசில் நாட்டு ஊடகங்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரபு நாட்டிலிருந்து ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
மேலும் அந்த பெண்ணுக்கு 3 கோடி வரதட்சணை தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதை கிரிஸ் கிளாரியா விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் மூன்று கோடி கொடுத்தாலும் தான் எந்த ஆணையும் திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை என்றும் தனக்கு யார் என்றே தெரியாத ஒருவரை எப்படி வெறும் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் கிரிஸ் கிளாரியா கூறியுள்ளார். 3 கோடி கொடுத்தும் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து பெற மறுத்த கிரிஸ் கிளாரியாவை பலர் பாராட்டி வருகின்றனர்.