சினிமா செய்திகள்
முதல்வருக்கும் உதயநிதிக்கும் நன்றி: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை!
தமிழக முதல்வருக்கும் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது நன்றியை தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து கூட்டு குழு ஒன்றை உருவாக்கியது. இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து இருந்தது.
அந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக முதல்வருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ளஅது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழத் திரைப்படத் தயாரிப்பாளகள் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு” கடந்த 17ஆம் தேதி அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபபாத வண்ணம், கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களது. கோரிக்கையை கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது. கோவை மாநகரில் உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்ற அரசாணை வெளியிட்டுருப்பது தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏறபடுததியுள்ளது.
அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும், தமிழ்த் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.