Connect with us

கிரிக்கெட்

கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி: பரிதாபத்தில் பஞ்சாப்

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருந்தது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 49 ரன்களும், லோம்ரர் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீத் சிங் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் மிக அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனை அடுத்து அறுபத்தி ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் அதன் பின்வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

குறிப்பாக கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை, இரண்டாவது பந்தில் 1 ரன் மட்டுமே கிடைத்த நிலையில் 3-வது பந்தில் விக்கெட் விழுந்தது. நான்காவது பந்தில் ரன் ஏதும் இல்லை, ஐந்தாவது வயதில் மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்தது. இதனால் ஒரே ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தபோது ஆறாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதனால் பஞ்சாப் அணியை கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரை மிக அபாரமாக வீசிய கார்த்திக் தியாகி ஒரே ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தற்போது 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதும், தோல்வியடைந்த பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய போட்டியில் கடைசி ஓவரை மிக அபாரமாக வீசி 2 விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கார்த்திக் தியாகி அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!