தமிழ்நாடு
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு.. தமிழக அரசு வழக்கு தொடுக்க முடிவு
![palanisamy-24-1503517768 (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/palanisamy-24-1503517768-1-3.jpg)
சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்த வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து, கர்நாடகா சென்று இதுகுறித்த வரைவு அறிக்கையை சமர்பித்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இது இந்த திட்டத்தில் கர்நாடக அரசு அடுத்தகட்ட பணிகளை செய்ய வழி வகுக்கும்.
ஆனால் இது உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு வழக்கில் வழங்கிய இறுதி தீர்ப்பிற்கு எதிரானது ஆகும். இதனால் தமிழக அரசுக்கு காவிரி நீர் பற்றாக்குறை ஏற்படும். மீண்டும் காவிரியில் தமிழகம் வஞ்சிக்கப்படும்.
இதனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.