Connect with us

தமிழ்நாடு

பொய் சொல்ல கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும், மாட்டுச்சாணி மூளைகளா? நிதியமைச்சர் பிடிஆர் ஆவேசம்

Published

on

பொய் சொல்வதற்கு கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூளைக்காரர்களுக்கு அந்த அறிவு இல்லை என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோவில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் மேலும் லக்னோவிற்கு 2 விமானங்கள் மாறி செல்ல வேண்டும் என்றும் அதனால் ஒரு நாளாகும் என்றும் அதனால்தான் செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து லக்னோவிற்கு நேரடியாக விமானம் இருக்கிறது என்றும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம்தான் பயண நேரம் ஆகும் என்றும் நிதியமைச்சர் ஒரு நாளாகும் என்று கூறியது ஏன் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் அன்று பிடிஆர் அவர்களின் கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால்தான் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் ஊடகமொன்று தெரிவித்திருந்தது. இதற்கு கடுமையாக பதிலளித்திருந்த பிடிஆர் அவர்கள் ’எனக்கு கொழுந்தியாவே இல்லை அப்படி இருக்கும்போது இல்லாத கொழுந்தியாள் மகளுக்கு விழா எப்படி நடக்கும்? என்றும் பொய் சொல்வதற்கு கூட குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூத்திரம் குடித்து மூளை கெட்டுப் போனவர்களா நீங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோல் இன்னொரு டுவிட்டில் ஜிஎஸ்டி கூட்டத்தில் மனைவியுடன் செல்வதற்காக முதல்வரிடம் தனி விமானம் கேட்டதாகவும் முதல்வர் தர மறுத்ததை அடுத்து அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிடிஆர் அவர்கள் பொய்யை மட்டுமேசொல்கிற முட்டாள்களே, எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்றும் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற பொறுப்பான நிலையிலிருக்கும் பிடிஆர் அவர்கள் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்பதற்கான சரியான காரணத்தை கூறாமல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!