Connect with us

சினிமா செய்திகள்

புத்தி இருக்கா? செய்தியாளரிடம் சீறிய நடிகை சமந்தா!

Published

on

samantha

பிரபல நடிகை சமந்தா திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது ’புத்தி இருக்கிறதா? நான் கோவிலுக்கு வந்து இருக்கிறேன்’ என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பது தெரிந்ததே. இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் என்பதும், தமிழ் திரையுலகிலும் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற பெயரை அவர் நீக்கிவிட்டதாகவும் சமந்தா என்று மட்டும் அவர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உறுதி என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விரைவில் பிரிந்துவிட வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமந்தா வந்திருந்தார். அப்போது அவர் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு கேள்வியைக் கேட்டார். அப்போது கடுப்பான சமந்தா ’நான் இப்போது கோவிலுக்கு வந்து இருக்கின்றேன். புத்தி இருக்கிறதா? என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Suresh_D7/status/1439077690561028098

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!