சினிமா செய்திகள்
புத்தி இருக்கா? செய்தியாளரிடம் சீறிய நடிகை சமந்தா!
பிரபல நடிகை சமந்தா திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது ’புத்தி இருக்கிறதா? நான் கோவிலுக்கு வந்து இருக்கிறேன்’ என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பது தெரிந்ததே. இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார் என்பதும், தமிழ் திரையுலகிலும் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற பெயரை அவர் நீக்கிவிட்டதாகவும் சமந்தா என்று மட்டும் அவர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது உறுதி என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விரைவில் பிரிந்துவிட வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமந்தா வந்திருந்தார். அப்போது அவர் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு கேள்வியைக் கேட்டார். அப்போது கடுப்பான சமந்தா ’நான் இப்போது கோவிலுக்கு வந்து இருக்கின்றேன். புத்தி இருக்கிறதா? என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Suresh_D7/status/1439077690561028098