தமிழ்நாடு
சமூக வலைதளத்தில் அவதூறு: டிக் டாக் திவ்யா கைது
யூடியூபில் ஆபாச பதிவு வெளியிட்ட திவ்யா என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேனி அருகே நாகலாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா என்பவர் யூடியூப் வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் திவ்யா யூடியூபில் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக சைபர் கிரைம் போலீசார் புகார் செய்யப்பட்டது
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் திவ்யாவின் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து திவ்யா தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் இன்று நாகூரில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யூட்யூபில் ஆபாச பதிவு பதிவு செய்த சுகந்தி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே யூடியூபில் ஆபாச பதிவு செய்த பப்ஜி மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்ததை அடுத்து தற்போது மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.