Connect with us

தமிழ்நாடு

கே.சி.வீரமணி வங்கிக்கணக்குகள் முடக்கமா? அதிர்ச்சி தகவல்

Published

on

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று காலை கேசி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். 34 லட்சம் ரூபாய் ரொக்கம், ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 175 யூனிட் மணல் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் கேசி வீரமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியதாகவும் வங்கி லாக்கரையும் சோதனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கேசி வீரமணி மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கே.சி.வீரமணி அவரின் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் அமைச்சராக இருந்த பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக, வீரமணி, அவரின் உறவினர்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடங்களில் சோதனைச் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இரண்டு இடங்கள், சென்னையில் ஆறு இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் நடத்தப்பட்டுள்ள சோதனையில் 34,01,060 ரூபாய் பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (அதாவது 623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இவ்வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் தோராயமாக 30 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்தியா55 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!