தமிழ்நாடு
முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்கள் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கேசி வீரமணி. இவர் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேசி வீரமணி. அவரது வீடு மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அதிமுகவினர் கேசி வீரமணி. வீட்டின் முன் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி ஆகியோர்களது வீட்டில் சோதனை நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோதனை நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பட்டியல் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பட்டியலில் வரிசைப்படி தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும் இன்னும் இந்த சோதனையை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில் தான் கேசி வீரமணி. வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.