தமிழ்நாடு
கர்ப்பமான 7-ஆம் வகுப்பு மாணவி: கலைக்க நீதிமன்றம் அனுமதி!
![Pregnant - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Pregnant.jpg)
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டில் உள்ள ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சிறுமியின் தாயார் ரிட் மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான சிறுமியின் 24 வார கால கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தனர். இதனையடுத்து 24 வார கர்ப்பத்தை கலைப்பது ஆபத்தானதா என மருத்துவர்கள் பரிந்துரை அளிக்குமாறு நீதிபதிகள் கேட்டிருந்தனர். மருத்துவர்கள் தங்கள் பரிந்துரையில் கர்ப்பத்தை கலைக்காமல் விட்டால் சிறுமியின் உயிருக்கே ஆபத்தானது என்று கூறினர். பின்னர் நீதிபதிகள் சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளித்துள்ளனர்.