Connect with us

தமிழ்நாடு

சுக்குநூறாக உடைந்துவிட்டேன்: நீட் தற்கொலை குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை!

Published

on

stalin

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

கடந்த செப்டம்பர் 2017-ல் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் நான் இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். கடந்த சனிக்கிழமை மாணவர் தனுஷ் தற்கொலையின்போதே, இனி இப்படியொரு துயரம் நிகழக்கூடாதென மாணவச்செல்வங்களை கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று அரியலூர் மாணவி கனிமொழியும், இன்று மாணவி சௌந்தர்யாவும் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த அடுத்தடுத்த செய்திகளை கேட்டதும், நான் சுக்குநூறாக உடைந்துபோய்விட்டேன். இப்போது எனக்கு வேதனையை விடவும், இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாதென்ற கவலைதான் அதிகம் இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவு, இப்போதுதான் கொஞ்சம் திறந்திருக்கு. அதையும் இழுத்து மூடும் செயல்தான், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. படிப்பதற்கு, தகுதி தேவையில்லை. படிச்சா, தகுதி தன்னால் வந்துவிடும். பல குளறுபடிகளை கொண்ட நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்ககூடியது. அதனாலேயே தி.மு.கழகம் இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியது. நாங்கள் இதற்கு முன் ஆட்சிப்பொறுப்பிலிருந்தபோதும் இந்தத் தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும் சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக இந்தத் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தனர். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடரனுமென நினைக்கிறார்கள்.

மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆகவேண்டும் என நினைப்பவர்களுடைய கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் இதிலிருந்து இறங்கிவராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், ‘12ம் வகுப்பை மட்டுமே அடிப்படையாக வைத்து, மருத்துவ சேர்க்கை நடத்தலாம்’ எனக்கூறி நீட் தேர்வை நடத்த வேண்டாமென்ற மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இதை ஒருமனதாக இருந்து நிறைவேற்றியுள்ளோம். இந்த மசோதாவை, இன்னும் பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களுடன் இணைந்து நீட் ரத்தை உறுதிசெய்வோம். இதுபோன்ற நேரத்தில், நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்வோருடைய செய்திகள், என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல இறங்கியுள்ளது.

மாணவர்களே… உங்களுடைய உயிர், விலைமதிப்பில்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுகே முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில் தான் இந்த நாட்டுடைய எதிர்காலமே அடங்கியுள்ளது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். உங்களாலும் மருத்துவராக முடியும். உங்களால் நினைச்சதை சாதிக்க முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோட இருங்க. உங்கள் உயிரை மாய்த்து, உங்களின் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பம் தந்துவிடாதீர்கள். நீங்கள் கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளரவேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இங்கே ‘இதுதான் விதி’ என்று எதுமில்லை. விதியை, மதியால் வெல்ல முடியும்.

முயற்சிதான் வெற்றியை தரும் என வள்ளுவர் சொல்லியுள்ளார். அத்தகைய துணிச்சலும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கை கொண்டவராக மாணவர்கள் எல்லோரும் வளரவேண்டும், வாழவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை சொல்ல அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண் உருவாக்கி கொடுத்துக்கொள்ளோம். மாணவ மாணவியருக்கு ஆலோசனை சொல்லவும், அவர்கள் சொல்வதை கேட்கவும் நம்முடைய மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நம் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் தரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினோர் அனைவரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்து… தயவுசெய்து… மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்றுகாட்டுவோம்”

இவ்வாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

இந்தியா50 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!