தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு 3வது பலி: மேலும் ஒரு மாணவி தற்கொலை!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் குழப்பம் இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற குழப்பம் இருந்த நிலையில் நீட்தேர்வு உறுதி என்று முடிவு செய்யப்பட்டவுடன் மாணவர்கள் மிகவும் அச்சத்துடனேயே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் தேர்வு நடைபெற்ற அன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அதனை நீட் தேர்வு முடிந்த பின்னர் அரியலூரை சேர்ந்த கனிமொழி என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிந்தது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்ற அச்சத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா அந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்ற அச்சத்தில் கடந்த இரண்டு நாட்களாக சௌந்தர்யா சோகமாக இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மூன்றாவது பலி ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.