உலகம்
இது தான் பெண்களுக்கு ஆபத்தான இடம்.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்..!
பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற ஆய்வினை செய்த ஐக்கிய நாடுகள் சபை என அழைக்கப்படும் ஐ.நா. கூறிய தகவல் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் வீடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பெண்களுக்குத் தங்கள் வீடுகளே ஆபத்தான இடம் என்ற ஐ.நா. ஆய்வு முடிவு உலகம் முழுவதும் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியும் வருகிறது.