தமிழ்நாடு
அடுத்தகட்டமாக 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா?
![students33 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/students33.jpg)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்ததில் இருந்து ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை தற்போது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த ஆலோசனையை செய்து வருகிறார். இந்த ஆலோசனைப்படி அடுத்த கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து விரைவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.