Connect with us

தமிழ்நாடு

இன்று நீட் தேர்வு: அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தின் உள்ளே சென்றுவிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு எழுதும் மையங்களை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தைரியம் அளித்து வருகின்றனர் என்பதும் அச்சப்படாமல் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டு வரும் துரதிருஷ்டமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இன்றும் நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தது என்ற மாணவன் தனுஷ் இன்று நீட் தேர்வு என்ற அச்சம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மாணவரின் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற விவசாயியின் மகன் தனுஷ். இவர் இரண்டு முறை ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாகவும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை என்ற தகவல் அந்த பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் நீட் தேர்வை அனைவரும் தைரியமாக எழுத வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!