Connect with us

கிரிக்கெட்

5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியா? இங்கிலாந்து அறிக்கையால் பரபரப்பு!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டிகளிலும் வென்று இருப்பதால் இந்தியா இந்த தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்ட ஒரு அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் போர்டு உடன் நடத்திய ஆலோசனையின்படி 5வது டெஸ்ட் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் இந்தியாவால் தனது அணியை களமிறக்க முடியவில்லை என்பதால் இந்தியா போட்டியை இழக்க நேரிட்டது என்று குறிப்பிட்டி இருந்தது

இதனை அடுத்து இந்தியா ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது போலும் இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது போன்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இந்த அறிக்கைக்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதன்பின் மாற்றப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா தனது அணியை களமிறக்க முடியவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு, போட்டியை இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டிருந்த வரிகளை நீக்கி உள்ளது. இதனை அடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாகவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!