கிரிக்கெட்
5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியா? இங்கிலாந்து அறிக்கையால் பரபரப்பு!
![eng cricket board - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/eng-cricket-board.jpg)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டிகளிலும் வென்று இருப்பதால் இந்தியா இந்த தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்ட ஒரு அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்திய கிரிக்கெட் போர்டு உடன் நடத்திய ஆலோசனையின்படி 5வது டெஸ்ட் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் இந்தியாவால் தனது அணியை களமிறக்க முடியவில்லை என்பதால் இந்தியா போட்டியை இழக்க நேரிட்டது என்று குறிப்பிட்டி இருந்தது
இதனை அடுத்து இந்தியா ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது போலும் இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது போன்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இந்த அறிக்கைக்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதன்பின் மாற்றப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா தனது அணியை களமிறக்க முடியவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு, போட்டியை இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டிருந்த வரிகளை நீக்கி உள்ளது. இதனை அடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாகவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Following ongoing conversations with the BCCI, the ECB can confirm that the fifth LV= Insurance Test at Emirates Old Trafford, due to start today, will be cancelled.
— England Cricket (@englandcricket) September 10, 2021