Connect with us

தமிழ்நாடு

2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு: கலெக்டர் உத்தரவால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Published

on

ராமநாத மாவட்ட கலெக்டர் திடீரென இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்தவர் இமானுவேல் சேகரன் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் என்பதும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்போது சில ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக கலவரம் வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இமானுவேல் சேகரன் நினைவேந்தல் தினத்தன்று பெரும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டும் கலெக்டரின் அனுமதியை பெற்று ஒருசில குறிப்பிட்ட நபர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட எந்தவித வாகனங்களும் நினைவஞ்சலி செலுத்தும் இடத்தில் அனுமதி கிடையாது என்றும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டு அமைதியாக திரும்பிச்செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ஜாதி சம்பந்தமான எந்த வித கோஷங்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும் கலெக்டர் அறிவிப்பு செய்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ந்தகம் ஏற்படுவதை தடுப்பதற்காகவே இன்று முதல் 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!