சினிமா செய்திகள்
மாட்டை வெட்டி ரத்தத்தை கட்-அவுட்டில் தெளித்த பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!
மாட்டை வெட்டி அதில் பீறிட்டு வந்த ரத்தத்தை பிரபல நடிகர் ஒருவரின் கட் அவுட்டில் தெளித்த ரசிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்றும் அவர் நடித்த ’நான் ஈ’ மற்றும் ’புலி’ உள்பட ஒருசில திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று நடிகர் சுதிப் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுதீப்பின் ரசிகர்கள் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற இடத்தில் பிரம்மாண்டமான கட்-அவுட் ஒன்றை வைத்து அதில் எருமை மாட்டின் ரத்தத்தை தெளிக்க முடிவு செய்தனர்.
இதற்காக ஒரு எருமை மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து அதன் கழுத்தைத் துண்டித்து அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தை எடுத்து கட்-அவுட்டில் தெளித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிய நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த வீடியோவை அடிப்படையாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதீப்பின் ரசிகர்கள் சிலரை கைது செய்து அவரிடம் விசாரணை அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிகழ்வு கன்னட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 25 சுதீப் ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் பெல்லாரி நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.