பிற விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய இருவருக்கும் பதக்கம் உறுதி என்ற செய்தியை சற்று முன் பார்த்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் பீகாரைச் சேர்ந்த சரத்குமாருக்கு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளது
சற்று முன் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதல் பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை தமிழக வீரர் மாரியப்பன் பெற்றுள்ளார். அமெரிக்க வீரர் சாம் குரூவ் மற்றும் மாரியப்பன் இடையே தங்கத்தை பெற கடும் போட்டி நிலவிய நிலையில் சாம் குருவ்வுக்கு தங்கமும், மாரியப்பனுக்கு வெள்ளியும் கிடைத்துள்ளது.
மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வெள்ளி மற்றும் வெண்கல கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து தற்போது இந்தியாவுக்கு 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் பதக்கப்பட்டியலில் இந்தியா 30வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்க பட்டியலில் சீனா 129 பதக்கங்களுடன் முதலிடத்திலும், பிரிட்டன் 80 பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.