சினிமா செய்திகள்
நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருளா? அதிகாரிகள் ரெய்டால் பரபரப்பு!
பிரபல கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு கன்னட நடிகைகள் வீட்டில் போதைப்பொருள் இருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திடீரென கன்னட நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேர் வீட்டில் போதைப்பொருள் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோதனையின்போது சோனியா அகர்வால் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 40 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சோனியா அகர்வாலுக்கு போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு இருக்கின்றதா? அப்படி தொடர்பு இருந்தால் அந்த போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள் யார் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இன்று ரெய்டுக்கு உள்ளான சோனியா அகர்வால், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சோனியா அகர்வால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில செய்திகள் மற்றும் இணையதளங்களில் செல்வராகவன் முன்னாள் மனைவி என்று தவறான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.