தமிழ்நாடு
மரத்தில் இருந்து பீச்சியடித்த தண்ணீர், குடங்களோடு ஓடிவந்த மக்க்ள்: மதுரையில் ஒர் அதிசயம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள மரம் ஒன்றில் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஒருசிலர் கைகளிலும் பிடித்து அருந்தினர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில் தெருவோர மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சிறிய துளைகளில் திடீரென தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறியது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களில் நீரைப் பிடித்து சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் கொட்டியதால் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தண்ணீரை கைகளில் பிடித்து அருந்தியவுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மதுரையில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் மரத்திற்கும் உள்ள வெற்றிடத்தில் தண்ணீர் நிரம்பி வந்திருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மரத்திற்கு கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் மூலமாக உறிஞ்சப்படும் அதிலிருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மதுரையில் உள்ள மரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.