Connect with us

தமிழ்நாடு

முன்னேறிய வகுப்புக்கு 10% இட ஒதுக்கீடு: அனுமதி இல்லை என நீதிமன்றம் உத்தரவு

Published

on

முன்னேறிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பரிந்துரை அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீடு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ’தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து தான் வழக்கு என்றும் மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எனவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை ஐகோர்ட் நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு உள்ளதால் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றும், இட ஒதுக்கீட்டு முறை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினர் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஒப்புதல் பெறவில்லை என்றால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்59 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா14 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!