Connect with us

இந்தியா

அமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பெங்களூருவில் பறிமுதல்.. நடந்தது என்ன?

Published

on

பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான் என்ற கார் ஓட்டுநர், பெங்களூரூ யுபி சிட்டி பகுதியில் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்திக் காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அமிதாப் பச்சன் பெயரிலிருந்து காருக்கு தேவையான ஆவணங்கள் ஓட்டுநரின் கையில் இல்லை. எனவே அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அமிதாப் பச்சனின் தற்போதைய கார் உரிமையாளரான பாபுவிடம் விசாரித்த போது, “பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் இருந்து 6 கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை 2019-ம் ஆண்டு நான் வாங்கினேன். பெயரை மாற்றுவதற்கு நான் ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டேன். ஆனால் அது இன்னும் செய்யப்படவில்லை.

எங்களிடம் 2 ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அதில் ஒன்று புதிது. அமிதாப் பச்சன் பெயரிலிருந்த காரை எனது மகள் ஓட்டுநர் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எனது மகளை நெலமங்கலா காவல் நிலையத்துக்கு ஆர்டிஓ அதிகாரிகள் அழைத்துள்ளனர். பின்னர் தன்னை வீட்டிற்கு அனுப்ப உதவுமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். நான் போக்குவரத்து ஆணையரைத் தொடர்புகொண்டு எங்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்க வேண்டாம் எனக் கூறினேன். அவர் பல கார்கள் ஒரே பதிவு எண்ணில் நகரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அதற்காகவே கார் பறிமுதல் செய்யப்பட்டது. சரியான ஆவணங்களைக் காண்பித்த உடன் வாகனத்தை விடுவிப்பதாகக் கூறினார்” என பாபு கூறினார்.

இது குறித்து பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையரைத் தொடர்பு கேட்ட போது, “ரோல்ஸ் ராய்ஸ் கார் சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது. காரின் உரிமையாளர் நேரில் வந்து சரியான ஆவணங்களைக் காண்பித்த பொது அது அமிதாப் பச்சனிடம் இருந்து முறையாக இவர் வாங்கி இருந்தது தெரிய வந்தது. ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு காரை ஒப்படைத்துவிட்டோம்” எனக் கூறினார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!