Connect with us

இந்தியா

அக்டோபரில் கொரோனா உச்சம் தொடும்: நிபுணர் குழு எச்சரிக்கை

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அக்டோபரில் மீண்டும் உச்சம் தொடும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக உள்துறையின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை மேலாண்மை மையத்தின் கீழ் குழு ஒன்று அமைக்கப்பட்டு கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்தது. இந்த குழு தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவல் வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என கூறப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது அலை பரவல் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அதற்கு முன்னரே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இந்தியாவில் குழந்தை மருத்துவத்திற்குத் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்கள் போன்ற வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது அலை பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் இதற்காக சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து உள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவை திறக்கப்படும் நிலையில் திடீரென அக்டோபர் மாதம் மூன்றாவது அலை உச்சம் பெறும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்33 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!