தமிழ்நாடு
ராதா ரவி என்னை மிரட்டினார்: சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிரபல பாடகி சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி தன்னை மிரட்டியதாக சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் வைத்ததும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் குரல் கொடுத்தனர். இதனையடுத்து அவர் அதிரடியாக ராதா ரவியால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நடிகர் ராதா ரவிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்து டுவீட் செய்துள்ளார்.
அதில், நான் மீ டூ தொடர்பாக குரல் கொடுக்கத் தொடங்கியதால் தான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது போன்று யார் பேசினாலும் உடனே ராதாரவி அவர்களை நீக்கிவிடுவார். இது பல முறை நடைபெற்றுள்ளது. நான் 2006-ம் ஆண்டில் இருந்து டப்பிங் பேசி வருகிறேன்.
போராட்டங்களுக்கு வராதவர்களுக்கு வேலை கிடையாது. இல்லை என்றால் டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து கண்டபடி திட்டுவார் ராதாரவி. ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் கேவலமாக திட்டுவார். நான் ஒரு முறை அப்படி திட்டு வாங்கியபோது என் அம்மாவும் உடன் இருந்தார்.
எனது இசை நிகழ்ச்சி ஒன்றை அவா் ரத்து செய்ய வைத்தாா். நான் அவரை தொடா்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, எனக்கும் தான் படப்பிடிப்பு உள்ளது. நான் வரவில்லையா. நீ வரவில்லை என்றால் ரெட் காா்டு கொடுப்போம் என்று மிரட்டியதாக சின்மயி பதிவிட்டுள்ளார்.