உலகம்
விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து பலி: ஆப்கனில் அதிர்ச்சி!
பேருந்து மற்றும் ரயில்களில் தான் படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் ஃபுட்போட் பயணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆப்கன் நாட்டில் இருந்து விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு திடீரென தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கன் அதிபர் மற்றும் துணை அதிபர் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் பிடித்த தாலிபான்கள் தற்போது தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சியில் மிகவும் பொதுமக்கள் கொடூரமாக நடந்தப்படுவார்கள் என்பதால் அந்நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆப்கான் விமான நிலையத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆப்கான் விமானத்தில் ஏறுவதற்கு பேருந்து மற்றும் ரயில்களைப் போல முண்டியடித்துக் கொண்டு இருக்கும் நபர்களை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஓடும் விமானத்தில் பயணிகள் ஏறியது குறித்த வீடியோவை சற்று முன் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தில் வெளியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக தளத்தில் வைரலாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.