சினிமா செய்திகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி கரம் நீட்டிய விஜய்!
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நடிகர் விஜய் உதவி கரம் நீட்டியுள்ளார்.
தமிழ் நாட்டினை தாக்கிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்த நிலையில் தென்னை, மா, வாழ, கரும்பு உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது.
இணையதளத்தில் டெல்டாவிற்காக உதவுங்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவர்களது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்சம் ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளனர்.
நடிகர் விஜய் வித்தியாசமாகத் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்குகளுக்கு இதுவரை 4.5 லட்சம் ரூபாய் பணத்தினை அனுப்பி நேரடியாக நிவாரண உதவிகளைச் செய்ய வைத்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் 4.5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு இருப்பதைச் சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அது சமுக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.