தமிழ்நாடு
டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. மக்கள் கலக்கம்!
![755084-11 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/755084-11-1.png)
தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது, டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
புயல் அதிகம் பாதித்த பட்டுக்கோட்டை, திருவாரூர், முத்துப்பேட்டையில் பலத்த மழை பெய்கிறது. இப்போதுதான் பல இடங்களில் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.