சினிமா
ஷங்கரின் புதிய படத்தில் நடிகை அஞ்சலி – பரபர தகவல்
இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தை இயக்குவதற்கு அவருக்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபல தெலுங்கு நடிகை கைரா அத்வானி தான் ஷங்கர் இயக்கும் படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராம்சரண் தேஜா, மகேஷ் பாபு உள்பட பல தெலுங்கு பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்சரண் தேஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.