Connect with us

தமிழ்நாடு

திமுக அரசின் வழக்குகளை எதிர்கொள்ள 6 பேர் கொண்ட ‘சட்ட ஆலோசனை குழு’: அதிமுக அதிரடி

Published

on

திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் மேலும் சில பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஜிபி கந்தசாமி அவர்கள் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் தயாராகி வருகிறது திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக தரப்பில் இருந்து 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தில்‌, பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ பலர்‌ மீது, ஆளும்‌ கட்சியினரின்‌ தூண்டுதலால்‌, பழிவாங்கும்‌ எண்ணத்தோடு பொய்‌ வழக்குகள்‌ புனையப்படுவது நாளுக்கு நாள்‌ அதிகரித்த வண்ணம்‌ உள்ளது. கழகப்‌ பணிகளிலும்‌, மக்கள்‌ பணிகளிலும்‌, அல்லும்‌ பகலும்‌ அயராது ஈடுபட்டு வரும்‌ கழகத்தைச்‌ சேர்ந்த அனைவருக்கும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்றென்றும்‌ பாதுகாப்பு அரணாகத்‌ திகழும்‌ என்பதை உறுதிபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியால்‌, திமுக-வினரின்‌ தூண்டுதலால்‌ கழகத்தினர்‌ மீது தொடுக்கப்படும்‌ பொய்‌ வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்‌ வகையில்‌, கழகத்தின்‌ சார்பில்‌ “கழக சட்ட ஆலோசனைக்‌ குழு” கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

ஜெயகுமார், தளவாய் சுந்தரம், சிவி சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை மற்றும் பாபு முருகவேல் ஆகியோர்கள் சட்ட ஆலோசனை குழுவில் இருப்பார்கள். நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக்குழு இந்த வழக்குகளுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும் எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!