இந்தியா
ஒலிம்பிக் போட்டி வீரர்களிடம் போனில் பேசினா மட்டும் போதாது- பிரதமருக்கு ராகுல் அட்வைஸ்!
இந்திய ஒலிம்பிக் வீரர்களிடம் போனில் பேசினால் மட்டும் போதாது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்த பின்னர் இந்திய வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டுகள் உடன் பரிசு மழையும் குவிந்து வரும் சூழலில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரிடமும் போனில் பேசி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
இந்நிலையில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற, பதக்கம் வென்ற வீரர்களுக்கே இன்னும் அரசு அறிவித்து பரிசுத்தொகை எதுவும் வந்து சேரவில்லை என ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதை மேற்கோள் காட்டியே ராகுல் காந்தி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ராகுல் காந்தி கூறுகையில், “விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் சென்று விளையாடிவிட்டு வந்த பின்னர் வீடியோ காலில் அழைத்துப் பேசினால் மட்டும் போதாது. அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை நிச்சயம் அவர்களிடம் சென்று சேர்கிறதா என்று பார்க்க வேண்டும். வாழ்த்துகள் மட்டும் விளையாட்டு வீரர்களுக்குப் போதாது. பாராட்டுகளும் உரிய பரிசுகளும் நிச்சயம் அவர்களிடம் சென்று சேர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.