தமிழ்நாடு
மொத்தமாக நிலைகுலைந்து.. டெல்டாவை நாசம் செய்த கஜா #SaveDelta
![755181-cyclone-gaja-1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/755181-cyclone-gaja-1-1.jpg)
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது.
பத்து வருட சேமிப்பு, உழைப்பு வீணாகி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து இருக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள். அங்கிருக்கும் பகுதிகள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது.
கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த புயலால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நீடாமங்கலம், ஆலங்குடி, சித்தேரி, குத்தாலம், வலங்கைமான், வடுவூர், திருமக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருத்துறைபூண்டி, தாராசுரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது.